வேகக்கட்டுப்பாட்டை இழந்து வல்லைப் பாலத்துக்குள் பாய்ந்தது வடிரகவாகனம். யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி கடல் உணவுகளுடன் வந்த வாகனமே வேகக்கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் தலைகீழாக கவுண்ட நிலையில் பாய்ந்தது.
வாகன சாரதி உட்பட இருவர் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றது.











