கிளிநொச்சி, வட்டக்கச்சியில் பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து தமது பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சும் இடங்களை முற்றுகையிட்டுள்ளனர்.
“போதைப்பொருளற்ற வட்டக்கச்சி” எனும் கருத்திட்டத்தின் கீழ் 100க்கு மேற்பட்ட பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, 420 லீட்டர் காடி, 10 லீட்டடர் கசிப்பு மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காட்டுப்பகுதிகளில் கசிப்பு காய்ச்சுமிடங்கள் அழிக்கப்பட்டன.










