நுவரெலியா நகர சபை மைதானம், குதிரைப் பந்தயத் திடல், கொல்வ் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் பனி படர்ந்து காணப்பட்டுள்ளது. 6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.
நுவரெலியாவில் தற்போது காணப்படும் கடும் குளிர் காலநிலையை அடுத்து, பனிப்பொழிவு அதிகரித்துள்ளதுடன் பல இடங்கள் பனிப்பொழிவு நிறைந்து காணப்படுகின்றன.
இதன் காரணமாக அங்கு மலர்ந்துள்ள மலர்கள் உள்ளிட்டவற்றைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் பெருமளவு நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார்கள்.
இதேவேளை பனிப்பொழிவின் காரணமாக காய்கறி உற்பத்திக்கும், தேயிலை உற்பத்திக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது








