பிரித்தானியாவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவது தொடர்பான பரிந்துரைகள் வெளியாகியுள்ளது.
பூஸ்டர்உ பதடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழு (JCVI) 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் கொரோன தடுப்பூசி செலுத்தப்பட்டு குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்குப் பிறகு, ஒரு டோஸ் ஃபைசர் தடுப்பூசி செலுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.
இதன் மூலம் பிரித்தானியாவில் 30 மில்லியன் மக்கள் இந்த பூஸ்ரர் டோஸ் மூலம் பயனடைவார்கள் என அறியப்படுகிறது.
இது பற்றிய இறுதி முடிவுகளை பிரித்தானிய அமைச்சர்கள் எதிர்வரும் காலங்களில் தீர்மானிப்பார்கள்.







