யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஒரு பீடமாக இருந்த வவுனியா வளாகம் கடந்த மாதம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என பிரகடனப்படுத்தப்பட்டது.
இதன் முதலாவது துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
சர்வமத வழிபாடுகளின் பின்னர் வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதுடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வவுனியா பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளதாக கூறினார்.







