நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் இன்று தொடக்கம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூட அரசு முடிவு செய்துள்ளது.கொவிட்-19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அடுத்த வாரம் படசாலைகளைத் திறக்கலாமா இல்லையா என்ற முடிவை மறுஆய்வு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.








