மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம அலுவலராகக் கடமையாற்றும் திரு.விஜியேந்திரன் (வயது 55) என்பவரின் என்பவரின் கொலைக்கு நீதி கோரி மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக உறுப்பினர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தை இன்று காலை 9.00 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 3ம் திகதி இரவு கடமையிலிருந்து திரும்பிய அவர் ஆத்திமோட்டை கள்ளியடிப் பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட போதும் உயிரிழந்துள்ளார்.






