அபாரவெற்றியுடன் சம்பியனாகி கடற்கரை கரப்பந்தாட்ட கிண்ணத்தை தனதாக்கியது வல்வை பெண்கள் அணி..
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களிற்கான கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்றைய தினம் இடம்பெற்றது. அந்தவகையில் இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய அணியினை எதிர்கொண்ட வல்வை அணியானது 23:21 ,19:21 , 15:04 என்ற புள்ளிகள் அடிப்படையில் 2:1 என்ற செற்கணக்கில் வெற்றியினை பெற்று சம்பியனாகியது.
சம்பியனாகிய வல்வை பெண்கள் அணியினருக்கும் அவர்களுக்கு பயிற்சியினை வழங்கிய பயிற்றுவிப்பாளருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்









