மானாங்கானை வல்வெட்டித்துறை திருமகள் சன சமூக நிலையத்தில் எதிர் வரும் 29.09.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணியளவில் கிருபா லேணர்ஸ் அணியினர் வருகை தந்து பாரிய நடமாடும் சேவை ஒன்றினை நடாத்த உள்ளார்கள்.
இச் சேவையில் சாரதி அனுமதிப்பத்திரத்தினை பெறுவதற்கான முன்னோடியான விடயங்கள் நடைபெற இருப்பதனால் அதன் முக்கியத்துவத்தை அறிந்து அனைவரையும் இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேண்டி நிற்கின்றார்கள் கிருபா லேணர்ஸ் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து திருமகள் சன சமூக நிலையத்தினர்.








