எதிர்பார்ப்புடன் எம் தாயக உறவுகள்..

0
549 views

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வல்வை நலன்புரிச்சங்கத்தினரின் (ஐ.இ) நிதிப்பங்களிப்பினூடாக 150 குடும்பங்களுக்கான நிவரான பொருட்களுடன் வல்வையில் இருந்து, வல்வை இளைஞர்கள் இருட்டுமடு தமிழ் வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் 75 (உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு, முல்லைமாவட்டம்)குடும்பங்களுக்கும், வள்ளிபுனம் மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் 75 (வள்ளிபுனம், தேவிபுரம், புதுக்குடியிருப்பு முல்லைமாவட்டம்) குடும்பங்களுக்கும் வழங்கியுள்ளார்கள்.

வன்னி மக்களின் நிலவரம்

அன்றாடம் கூலித்தொழில் செய்யும் மக்கள் இடைத்தங்கல் முகாமில் இருக்கிறார்கள் தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது.ஆகையால் அவர்களுக்கான உணவுத்தேவை உள்ளது.மற்றும் அத்தியாவசிய பொருட்களும் தேவை அவற்றை நீங்கள் நேரடியாக வந்து கிராம சேவையாளருடன் தொடர்புகொண்டு உதவிகளை செய்யலாம்.உங்கள் உறவுகள் உங்களை எதிர்பார்க்கிறார்கள்.
நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here