வடக்கில் பொழிந்துவரும் கனமழையால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 38 அடி 6 அங்குலத்தை தாண்டியது. மேலதிக நீரை வெளியேற்றவென 11 வான்கதவுகளும் முழுதாக திறக்கப்பட்டது இதன் காரணமாக மேலும் வெள்ளத்தில் மூழ்கின நீரோட்டப்பகுதிகளும் நீரேந்துப்பகுதிகளும்.
படையினர் உட்பட பலரும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். நிலைமை மேலும் மோசமாகுமென கருதப்படுகின்றமையால் மக்களை விழிப்போடும் பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.











