கர்ப்பிணி பெண்கள் திடீர் மரணம்

0
753 views

திருகோணமலை பொது வைத்திய சாலையில் காய்ச்சல் காரணமாக ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட இரு கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேர் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் திருகோணமலை – நித்தியபுரி, முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 31 வயதுடைய எஸ். அகிலவாணி எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை நிலாவெளி இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தோட்டம் பகுதியை சேர்ந்த இருவர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here