சனசமூக நிலையங்களிற்கிடையிலான போட்டிகளின் தொடர்ச்சி …
உள்ளூராட்சி மாதத்தை முன்னிட்டு சனசமூக நிலையங்களிற்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துமுகமாகவும் நகர சபைக்கும் சனசமூக நிலையங்களிற்கிடையேயும் இடைத் தொடர்புகளை அதிகரிக்கு முகமாகவும் பெண்களிற்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டி இன்று நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நகர சபையினால் நடாத்தப்பட்டது.
இன்றைய சனசமூக நிலையங்களிற் கிடையிலான போட்டியில் கணபதி படிப்பகம் மற்றும் வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் என்பவர்களிற் கிடையில் இறுதியாட்டம் இடம் பெற்றது.
அதில் வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தினர் வெற்றி வாகை சூடினர்.








