ஐரோப்பாவில் 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய போர் !!

0
450 views

ஐரோப்பாவில் 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய போருக்கு” ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அவர் பிபிசியின் சோஃபி ராவொர்த்திடம் ஒரு பேட்டியில் கூறினார்: ”
உக்ரைன் தலைநகர் கியேவை சுற்றி வளைக்கும் படையெடுக்கும் அனைத்து திட்டங்களும் ரஷ்யாவால் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாக உளவுத்துறை தெரிவிக்கிறது என்று திரு ஜான்சன் கூறினார்.
“இந்தப் போரினால் ஏற்படப்போகும் உயிர்களின் இழப்பின் விலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.
வருடாந்த பாதுகாப்பு மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் சந்திக்கும் முனிச்சில் இருந்து பிரதமர் உரையாற்றினார்.
அமெரிக்க அரசாங்கத்தின் சமீபத்திய மதிப்பீடுகள், ரஷ்யா மற்றும் அண்டை நாடான பெலாரஸ் ஆகிய இரண்டிலும் இப்போது உக்ரைனின் எல்லையில் நிலைகொண்டுள்ள ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கை 169,000 முதல் 190,000 வரை இருக்கும் என்று தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here