

வல்வை நகரசபை வரவு செலவுத் திட்டம் இன்று தோல்வியடைந்துள்ளது.
முன்னாள் நகரசபைத் தலைவர் திரு.கருணாநந்தராசா அவர்கள் கொரொனா தொற்றுக் காரணமாக காலமானதையடுத்து, 2 மாதங்கள் முன்பு இடம்பெற்ற இடைத் தேர்தலில் சுஜேட்சைக் குழுத் தலைவர் திரு.செல்வேந்திரா அவர்கள் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரான திரு.ஞானேந்திரனின் ஆதராவால் தவிசாளாராகத் தெரிவானார்.
ஆனால் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் திரு.ஞானேந்திரன் மீண்டும் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் வல்வை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்து சமனிலை மாறியுள்ளது.









