மரண அறிவித்தல்
அமரர் வைரமுத்து ஜெயச்சந்திரன் (கப்டன்)
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும்
ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் வைரமுத்து ஜெயச்சந்திரன் (கப்டன்)
அவர்கள்28.02.2021 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் காலம் சென்ற திரு.திருமதி வைரமுத்து (ரெத்திமாஸ்ரர்) பூரணலட்சுமி அவர்களின் அன்பு மகனும்
காலம் சென்ற குருசாந்தமூர்த்தி மனோன்மணி அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னார் ஜெயசாந்தி (கட்டி)அவர்களின் அன்புக் கணவரும்
விஜயநந்தினி, ஜெயநந்தினி, ஜெயமதி, ஜெயரதி, லட்சுமிபிரியா ஆகியோரின்
பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னார் அருள்வேலவன், முபாரக், வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்
சானா,ஹாசினி,சம்யுக்தா, முகீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் அன்னாரின் வீட்டில் நடைபெற்று 28.02.2021 அன்று மாலை 5 மணிக்கு ஊறணி இந்து மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் கிரியைகள் நடைபெற்றது.
இவ்வறித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்









