பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் பயணித்து கொண்டு இருந்த நிலையில் வண்டி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, கடலுக்குள் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் கற்கோவளத்தைச் சேர்ந்தவர் 30 வயதுடைய நபர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்திதுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








