2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 50 பாடநெறிகளுக்கு 4,253 பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் கட்டமாக, ஒவ்வொரு பாடத்திற்கும் ஆட்சேர்ப்பு செய்ய மாவட்ட ஒதுக்கீட்டிற்கு சமமான எண்ணிக்கையினர் நேர்காணல்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது நேர்காணல்களுக்கான கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.







