கொழும்பு புதுக்கடையில் உள்ள உயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் சற்று முன்னர் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் படையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.








