வடமராட்சியின் முதல் சூப்பர் டீசல் நிலையம் நேற்று புறாப்பொறுக்கி எரிபொருள் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளரால் வல்லை வீதி புறாப்பொறுக்கியில் இயங்கும் உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுவுச்சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று சுப்பர் டீசல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இதுவரை வடமராட்சியில் சுப்பர் டீசல் இல்லாததோடு சிறுப்பிட்டிக்கு இந்த எரிபொருளுக்காக செல்லும் நிலை இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.







