கண்டியில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டைப் போட்டியில் வடமாகாணவீரர்கள் அதிக பதக்கங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். கண்டி நாவலப்பிட்டிய ஜயதிலக விளையாட்டு மைதானத்தில் 10 நாடுகள் பங்குபற்றிய போட்டிகள் கடந்த 08 – 10 ம் திகதிகளில் நடைபெற்றன். இதில் பிரான்ஸ், சிங்கப்பூர், கனடா, இந்தியா, பாக்கிஸ்தான் ,பெல்ஜியம், ஆப்கானிஸ்தான், பல்கேரியா, எகிப்து மற்றும் இலங்கை உட்பட்ட 10 நாடுகள் பங்குபற்றின.
வடக்கு மாகாணத்தைப் பிரதிபலித்து 19 வீர வீராங்கனைகள் 17 தங்கப்பதக்கங்களையும் இரு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர். வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியைச் சேர்ந்த S.சஞ்சயன் சிறந்த குத்துச்சண்டைவீரருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுக் கொண்டார்.








