யாழ்ப்பாணம் தமிழர் தேசத்தின் அழகையும் வரலாற்றையும் சித்திரிக்கும் விதமாக யாழ்.நகரில் உள்ள சுவர்களில் ஓவியங்கள் வரையும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது.
சமூக அக்கறையுள்ள இளைஞர் யுவதிகள் தாமாக முன்வந்து யாழ் நகரை அழகுபடுத்தும் செயற்பாட்டுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஓவிய கலைஞர்கள், மற்றும் இளைஞர் யுவதிகளின் பொது நலன் கொண்ட சேவைக்கு நாமும் வாழ்த்துவோம்.































