கிளிநொச்சி கனகாம்பிகைக்கும் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த பரமநாதன் கோபிதர்சன்
உலகக் கிண்ண கபடிப் போட்டியில் பங்கு பற்றுவதற்காக இலங்கை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் ஈரானில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கனிஸ்ட கபடிப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை தேசிய அணிக்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அண்மையில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டக் கபடிச் சுற்றுப் போட்டியில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலையின் 20 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் பங்கு பற்றி திறமையாக செயற்பட்டதன் அடிப்படையிலேயே இவர் இலங்கை தேசிய அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.









