இந்தோனேசியாவில் சுமாத்ரா தீவில் 6.8 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாண்டன் பகுதியில் இருந்து 151 கிமீ தருணத்தில் கடலுக்கு அடியில் 42.8 கிமீ ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .
குறித்த பகுதியில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
சரியாக 17 நிமிடம் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தீவில் உள்ள சில வீடுகள், கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்துள்ளன. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் தலைநகர் ஜகர்த்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.







