நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்துகொண்டிருந்த வாகனம் வல்லைப் பாலத்தில் தடம்புரண்டதில் அதில் எடுத்து வரப்பட்ட வாகன சுத்திகரிப்பு திரவம் பாலப்பகுதியில் சிந்திக் காணப்படுகின்றது.
வாகனத்தின் செலுத்தி இறுகியதால் நிலைதடுமாறிய வாகனம் பாலத்தில் காணப்படும் கட்டுடன் மோதிய போதும் சாரதியின் சாதுரியத்தால் கீழே விழாமல் பாதுகாக்கப்பட்டது. இதன்போது வாகனத்தில் கொண்டுவரப்பட்ட பெருமளவான வாகன சுத்திகரிப்புத் திரவம் வீதி எங்கும் பரவியுள்ளது. தற்போது சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும் பாலத்தினூடாகப் பபயணம் செய்வோர் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.











