கம்பஹா மாவட்டத்தில் மினுவங்கொட மற்றும் திவிலுபிட்டிய பொலிஸ் வலயத்துக்குட்பட்ட 7 கிராம சேவையாளர் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மினுவங்கொடவைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







