பெண்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு தெருவெளி நாடகம் ஒன்று கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் இராமநாதபுரம் வெற்றிப்பாதை சனசமூக நிலைய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பாலியல் லஞ்சம், பாலியல் துன்புறுத்தல், சிறுவர் பாதுகாப்பு, போதைப்பொருள் பாவனை உள்ளிட்டவற்றிலிருந்தும், குடும்ப வன்முறை மற்றும் பாலியல்சார் விடயங்களிலிருந்தும் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவது தொடர்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.









