அந்தியேட்டி அழைப்பிதழ்
அமரர் இரத்தினசாமி கார்மேகசுந்தரம் (ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் (AGA), (சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்க முன்னாள் உறுப்பினர்)
கடந்த 21.06.2020 அன்று சிவபதமடைந்த எமது தந்தையின் மறைவுசெய்தி கேட்டு எமது துயர் பகிரநேரில் கலந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனுதாப செய்திகளை தொலைபேசி, குறுஞ்செய்தி, செய்தித் தளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்தவர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துகொள்கின்றோம்.
எமது தந்தையின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 21.07.2020 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று புனித ஊறணி தீர்த்தக்கரையில் அஸ்தி கரைக்கப்பட்டு, சபிண்டீகரன கிரியைகள் அதே தினம் பி.ப. 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இங்கனம் குடும்பத்தினர்
மனைவிஇ மக்கள், மருமக்கள், பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள்
சி.கு வீடுஇ நெடியகாடுஇ வல்வெட்டித்துறை









