அரை இறுதியை தக்க வைத்தது வல்வை அணி

0
680 views

கம்பர்மலை கலாவாணி சனசமுக நிலையமானது தனது வைரவிழா முன்னிட்டு அழைக்கப்பட்ட கழகங்களிற்கு இடையில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்தி வருகின்றது.

அந்தவகையில் இன்றைய தினம் இடம்பெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் வல்வை அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் அணியானது மோதியது.
பரபரப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை அணியானது 2−1என்ற விகிதத்தில் கோல்களைப் பதிவு செய்து வெற்றிபெற்றது. இருகோல்களையும் வல்வை வீரன் பிரசாந் பெற்றுக்கொடுத்தார். இன்றைய ஆட்டநாயகனாக வல்வை அணியின் சி. தர்சன் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இன்றைய போட்டியில் வல்வை அணியின் அனைத்து வீரர்களின் ஆட்டமும் மிகச்சிறப்பாக இருந்தது. அவர்கள் இனி வரும் போட்டிகளில் மிகவும் சிறப்பான வெற்றிகளைப் பெற வாழ்த்துகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here