லண்டனில் அதிக தமிழ் மக்கள் கலந்து கொள்ளும் விளையாட்டு விழாவான வல்வை கோடை விழா 18.6.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகின்றது. உதைபந்தாட்டம், கிறிக்கெட, கரப்பந்தாட்டம், நெட்போல், கபடி, கயிறு இழுத்தல் என்று 200 மேற்பட்ட அணிகள் போட்டிகளில் பங்கு பற்றுகின்றன. வெற்றிக்கிண்ணங்களுடன் 7000 பவுண்ஸ்க்கு மேல் பணப்பரிசில்களும் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்பட இருக்கின்றன. சிறுவர் விளையாட்டில் பங்கு பெறும் சிறுவர்கள் காலை 11 மணிக்கு முதல் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். பார்வையாளர் (கார் பாக்கிங் உட்பட) அனுமதி இலவசம்












