யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை (22) மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் பதற்றம் நிலவுகின்றது.
இதனையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
மாணவிகளுடன் தகாத முறையில் நடந்த ஆசிரியர்; பெற்றோர் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகள் சிலருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 8 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.குறித்த ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டுமென நேற்றைய தினம், வலய கல்வி பணிமனைக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் உள்ள ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் ஏழாம் வகுப்பு மாணவிகள் சிலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பாக அந்த பாடசாலையில் பணியாற்றும் மற்றுமொரு ஆசிரியராலும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களாலும் அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதிலும், அதிபர் இதனை மூடி மறைக்க முட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கல்விப் பணிப்பாளர்களும் நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பெற்றோர்களும் பாடசாலையின் மாணவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இப் பாடசாலையில் இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பெற்றார்….
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி பெரியபுலம் மகா வித்தியாலய 12 வயது நிரம்பிய 05 மாணவிகள் அப்பாடசாலை விஞஞான ஆசிரியராகக் கடமையாற்றும் திரு கோபலகிருஸ்ணன் என்பவரால் கடந்த வாரம் பாடசாலையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
இதனை நேரில் கண்ட அப் பாடசாலை பெண் ஆசிரியர் ஒருவரினால் பாடசாலை அதிபர் திரு ரவிச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டபோது அவரால் இது தொடர்பாக எதுவித சடவடிக்கையும் எடுக்காது சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஏனைய பாடசாலை ஆண் ஆசிரியர்களுடன் சேர்ந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதுடன் முறையிட்ட குறிக்கப்பட்ட பெண் ஆசிரியரை அவசர அவசரமாக கல்வித் திணைக்கள உதவியுடன் இடமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வலயக் கல்விப்பணிப்பாளருக்கு அறிவித்தும் அவரால் இது தொடர்பாக எதுவித சடவடிக்கையும் எடுக்காது சம்பந்தப்பட்ட ஆசிரியரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதனை அறிந்த சமூகஆர்வலர், நலன்விரும்பிகள் இப்பிரச்சனை தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.இதனை தொடர்ந்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளினால் இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் இதே வேளையில் இவ்விசாரணையைக் குழப்பும் நோக்கில் அப்பாடசாலை ஆசிரியர்களான சுபதீசன்இ தபேந்திரன் ஆகியோர் றிக்கப்பட்ட மாணவிகள் வீட்டுக்குச் சென்று பிள்ளைகளையும் பெற்றோரையும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று அச்சுறுத்தியுள்ளனர்.மேலும் இவ்விசாரணை மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையில் இவ்வாறான துஸ்பிரயோகம் நீண்ட காலமாகவே இடம்பெற்று வருவதுடன், இதில் பல ஆண் ஆசிரியர்களும் ஒரு பெண் ஆசிரியையும் தொடர்புபட்டது தெரியவந்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் பெருமளவு மறைமுகமாக நடைபெற்று வருவதை சமூக ஆர்வலர் தெரிவிப்பதுடன் இவ்வாறானவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கடப்பிடிக்கவேண்டும் என்னு கருத்து தெரிவித்துக் கொள்கின்றனர்.