யாழ்.தொண்டமனாறு கடற்பகுதியில் குடா நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வைக்கப்பட்டிருந்த 12 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை வல்வெட்டித்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றைய தினம் காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் யாரும் கைது செய்யப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் காலை வல்வெட்டித்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலொன்றையடுத்து இக் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.இதன்படி காலை காலை 7 மணியளவில் தொண்டமனாறு கடற்பரப்பின் ஊடாக படகொன்றில் கொண்டுவரப்பட்ட ஹெரோயினை மற்றுமொருவருக்கு கை மாற்றுவதற்காக குறித்த இடத்தில் வைத்திருந்த போது அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.எனினும் ஹெரோயினை கொண்டு வந்தவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஹெரோயினாது இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும் அதனை யாழ்ப்பாணத்தினுடாக கொழும்பு அல்லது வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டு இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் தப்பிச் சென்றவரையும் கடத்தலோடு தொடர்புடையவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் கடத்தல் தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.