டயட் ஃபிஸி பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் சூயிங் கம் உள்ளிட்டஆயிரக்கணக்கான பொருட்களில் பயன்படுத்தப்படும் செயற்கைஅஸ்பார்டேம் புற்றுநோய்க்கான காரணம் என உலக சுகாதாரஅமைப்பு கண்டறிந்துள்ளது.
ஆனால் சர்க்கரைக்கு மாற்றான அஸ்பார்டேம் சரியான அளவில்பாவித்தால் பாதுகாப்பானது என்றும் WHO நிபுணர்கள் குழுகூறியுள்ளது.
13/07/2023 வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒருஅறிக்கையில், WHO இன் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) அஸ்பார்டேமை “மனிதர்களுக்கு புற்றுநோயாக்கான காரணியாக இருக்கலாம்” எனவகைப்படுத்தியுள்ளது.
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உணவு சேர்க்கைகள்தொடர்பான கூட்டு நிபுணர் குழு, ஒரு முழுமையான ஆய்வைமேற்கொண்டது, ஒரு நபர் ஒவ்வொரு நாளும் ஒரு கிலோ உடல்எடையில் 0-40mg குடிப்பது பாதுகாப்பானது என்று ஆலோசனைகூறியுள்ளது.
70 கிலோ எடையுள்ள ஒருவர், ஒரு நாளைக்கு ஒன்பது முதல் பதின்நான்கு கேன்களுக்கு மேல் டயட் குளிர்பானத்தை உட்கொண்டால் ஆபத்தானது எனவும் WHO கூறியுள்ளது.







