சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக், கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார்
கையில்வேலால் எனைக் காக்க வென்று வந்து
வரவர, வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக



















