கிளாஸ்கோவில் நடைபெறும் COP26 காலநிலை மாநாட்டில் ஒரு வாரத்தின் முடிவில் உலகத் தலைவர்கள் முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கின்றனர்.
40 க்கும் மேற்பட்ட நாடுகள் 2050 க்குள் நிலக்கரியை படிப்படியாக அகற்றுவதாக உறுதியளித்துள்ளன,
மேலும் 100 தலைவர்கள் 2030 ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளதுடன் காடுகளை மீளுருவாக்கம் செய்வதற்கும் இசைந்துள்ளன.
இதற்கிடையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மீத்தேன் வெளியேற்றத்தையும் குறைக்க இசைந்திருப்பதாக அறிவித்துள்ளன.










