சுனாமி அனர்த்தத்தின் 16வது நினைவு தினம் இன்றாகும். 26.12.2004 அன்று வீசிச் சென்ற கொடிய அலைகளின் கோரத் தாண்டவத்தினால் உயிழந்த உறவுகளை நினைந்து அனைவரும் அஞ்சலி செலுத்தி கொண்டாடியுள்ளனர்.
தொண்டைமனாற்றைச் சேர்ந்த உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை தொண்டைமானாறு கடற்கரையில் இடம்பெற்றது. தொண்டைமானாறு கடற்தொழில் கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இந்நிகழ்வில் அனர்த்தத்தால் காவு கொள்ளப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு தீபமேற்றி மலர்தூவி அஞ்சலி செய்தனர்.
















