நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் வடமராட்சி கல்வி வலயத்தின் புதிய பதில் வலயப்பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.யோகசாமி ரவீந்திரன்.
வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளராக இருந்த திரு.சி.நந்தகுமார் அவர்கள் கடந்த 7 ஆம் திகதி ஓய்வு பெற்றுச்சென்றார்.
அதன் பின்னர் புதிய கல்விப்பணிப்பாளராக ரவீந்திரனை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நியமித்த போதும் அவருக்கான நியமனக் கடிதம் வழங்குதில் இழுபறி நிலை காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் இவரை தற்போது பதில் வலயக்கல்விப் பணிப்பாளராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பபட்டதை அடுத்து நேற்றைய தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.









