வட மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவினர் நடத்தும் மாவட்ட ரீதியாக நடத்தும் ஆண் பெண் இருபாலாரிக்குமான பளூதூக்கல் ,மற்றும் கராத்தே போட்டிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி அரியாலை சரஸ்வதி விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் பங்கு பற்ற விரும்பும் வீர வீரங்கனைகள் தமது பிரதேச செயலக விளையாட்டு அலுவலரூடாகத் தமது பதிவுகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட விளையாட்டு அதிகாரி கே. விஜிதரன் கேட்டுள்ளார்







