யாழ்மாவட்ட கடின பந்து அணியிலும், பொலிஸ் பிறிமியர் அணியிலும் இணைந்து விளையாடி வரும் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வரும் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரும் ஆகிய தவராஜா பிரதீப் , கே.பி பவுண்டேசனால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இவரை கௌரவப்படுத்தும் முகமாக கே பி பவுண்டேசன் சார்பாக ஓய்வு நிலை நிர்வாக கிராம அலுவலர் தி.வரதராஜன் அவர்களால் ரூபா 32,000/- பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டன.









