வல்வை கப்பலுடையவர் தேவஸ்தான விநாயகப் பெருமானின், அருளால் எமது ஆலயத்தில் நம்பியாண்டார் நம்பி எழுந்தருளி பெருமானின் கும்பாவிஷேகமும் பால் காப்பும்…
11.07.2019 செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணிக்கு நம்பியாண்டார் நம்பிக்குரிய கும்பாவிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகி புதன்கிழமை காலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை பால் காப்பு சாத்தி தொடர்ந்து கும்பாவிஷேகம் நடைபெற்று நம்பியாண்டார் நம்பி வீதி உலா வருவார்கள்.
எம் பெருமானின் பால் காப்பினை சாத்தி விநாயகப் பெருமானைத் தரிசித்து திருவருளினைப் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
நிர்வாகம் (வல்வை கப்பலுடையவர் தேவஸ்தானம்)










