56ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வல்வை உதயசூரியன் விளையாட்டு கழகம் நடாத்தும் விளையாட்டு விழாவில் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி நேற்று இரவு உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்றது.
போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேதாஜி எதிர் ரேவடி.ஐ.இ.விளையாட்டு கழகம் மோதியது. ஆட்டநேரமுடிவில் இரு அணிகளும் 1:1 என்ற கோல்கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது. வெற்றியை தீர்மானிப்பதற்காக நடுவரினால் தண்ட உதை வழங்கப்பட்டது. அதில் 1:0 என்ற கோல்கணக்கில் நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.









