யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அதனை நினைவுகூரும் நிகழ்வானது இன்று மாலை இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலக முன்பாக இந் நிகழ்வு இடம்பெற்றது. நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு அனுட்டிக்கப்பட்டிருந்தது.
ஆசியாவின் அறிவுப் பொக்கிசமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் நூலகம் 1981ஆம் ஆண்டு சிங்கள இனவெறிக் கும்பலால் தீமூட்டி எரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.









