இலங்கை மத்திய வங்கி சேதமடைந்த நாணயத்தாள்கள் தொடர்பாக இறுதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 31 வரை சேதமடைந்த கிறுக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அனுமதிப்பத்திரம் கொண்ட வர்த்தக வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
மேலும் நாணயத்தாள்களை சேதப்படுத்தல் அல்லது மாற்றுதல் 1949 ஆம் ஆண்டு 58 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் கீழ் குற்றம் இதன் கீழ் கைது செய்யப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் சில சந்தர்ப்பங்களில் இரு தண்டணைகளும் வழங்கப்படும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.