வல்வெட்டித்துறை சிவன்கோவிலில் வருடாந்த திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், நேற்று நடந்த 13ஆம் திருவிழாவில் இரண்டு போலந்து நாட்டவர்கள், சுவாமி வீதியுலா வரும் போது தீவட்டி, தீப்பந்தம் ஏந்தி வலம் வந்தனர். சைவ சமய மரபுப்படி வல்வெட்டித்துறை ஆலயங்களில் ஆண்கள் வேட்டி மாத்திரம் அணிவது வழக்கம்.
போலந்து நாட்டவர்கள் இருவரும், நேற்று சைவ மரபுப்படி வேட்டி சால்வையுடன் பக்தி பூர்வமாக தீப்பந்தம் ஏந்திச் சென்றனர். ஆலயத்தின் எஞ்சிய திருவிழாக்களிலும் தாம் பங்கேற்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை சிவன்கோவிலில் வருடாந்த திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், நேற்று நடந்த 13ஆம் திருவிழாவில் இரண்டு போலந்து நாட்டவர்கள், சுவாமி வீதியுலா வரும் போது தீவட்டி, தீப்பந்தம் ஏந்தி வலம் வந்தனர்.
சைவ சமய மரபுப்படி வல்வெட்டித்துறை ஆலயங்களில் ஆண்கள் வேட்டி மாத்திரம் அணிவது வழக்கம். போலந்து நாட்டவர்கள் இருவரும், நேற்று சைவ மரபுப்படி வேட்டி சால்வையுடன் பக்தி பூர்வமாக தீப்பந்தம் ஏந்திச் சென்றனர். ஆலயத்தின் எஞ்சிய திருவிழாக்களிலும் தாம் பங்கேற்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.