லண்டனில் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்க அலுவலக வீடு கொள்ளையிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் Mitcham பகுதியில் வல்வையர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் Mortimer Road இல் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்க அலுவலகம் உள்ள வீட்டில் 26ஃ10ஃ2016 புதன்கிழமை இரவு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் உறவினருடைய மரண வீட்டுக்கு சென்றிருந்த வேளை பின்புற யன்னல் உடைக்கப்பட்டு அங்கிருந்த laptops மற்றும் நகைகள் திருடப்பட்டன.
CHITHAMBARA OSA INTERNATIONAL லண்டனில் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டு சிதம்பராக்கல்லூரி மற்றும் மாகாண கல்வி அமைச்சுடன் கல்வி அபிவிருத்தி பணிகளில் பங்காற்றிவருகின்றது. கண்காணிப்பு காமெராக்களை பரிசோதித்த காவல்துறையினால் தடயவியல் பரிசோதனையையும் மேட்கொண்டனர். கொள்ளை சம்பவ CCTV காணொளி இணைக்கப்பட்டுள்ளது