தொண்டைமனாறு தடுப்பணைப் புனரமைப்புக்கான அடிக்கல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கான இ.சரவணபவன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோரால் இணைந்து நாட்டப்பட்டது.
உலக வங்கியின் சுமார் 500 மில்லியன் ரூபா செலவில் தொண்டைமனாறு நன்னீர் தடுப்பணை புனரமைக்கப்படவுள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை விவசாய கூட்டறவுத்தறை அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் சி.சிறிதரன் ஆகியோர் இணைந்து அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான க.தர்மலிங்கம் எம்.கே சிவாஜிலிங்கம் மற்றும் சி.அகிலதாஸ் கரவெட்டிப்பிரதேச செயலர் சி.சிவஸ்ரீ மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர் இ.த. ஜெயசீலன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.