ரீ20 இல் பலத்த போராட்டத்துக்கு மத்தியில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து….

0
313 views

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2–0 என்ற கணக்கிலும்இ 5 ஒருநாள் தொடரை 3–1 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றியது. இரண்டு 20 ஓவர் போட்டித்தொடரில் முதல் ஆட்டம் இன்று நடந்தது.இலங்கை கேப்டன் சன்டிமால் ‘டாஸ்’ வென்று நியூசிலாந்தை முதலில் விளையாட அழைத்தார். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. அதிரடியாக துடுபெடுத்தாடிய தொடக்க வீரர் குப்தில் 34 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரிஇ 4 சிக்சர்)இ நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 42 பந்தில் 53 ரன்னும் (5 பவுண்டரிஇ 1 சிக்சர்) எடுத்தனர். குலசேகரா 2 விக்கெட் கைப்பற்றினார்.
183 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை களம் இறங்கியது. அந்த அணி இலக்கை நோக்கி முன்னேறிய போது விக்கெட்டுகளும் சரிந்தன. ஆட்டத்தின் கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைபட்டது. கைவசம் 3 விக்கெட் இருந்து.எலியட் வீசிய அந்த ஓவரில் இலங்கை அணியால் 9 ரண்னே எடுக்க முடிந்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது. தொடக்க வீரர் தனுஷ்கா குணதிலங்கா 46 ரன்னும்இ ஸ்ரீவர்த்தனா 42 ரன்னும் எடுத்தனர். போல்ட்இ ஹென்றி தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். ஆட்டநாயகனாக 21 ஓட்டங்களுக்கு 03 விக்கெட் வீழ்த்திய போல்ட் தெரிவானார்
2–வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 10–ந் தேதி நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here