அம்பாள் அருளாட்சி – நூல் வெளியீட்டு விழா – டென்மார்க்
அம்பாள் அருளாட்சி – நூல் வெளியீட்டு விழா – டென்மார்க்
சிறந்த கல்வி அறிஞர், கல்வி பணிப்பாளர், சிதம்பராக்கல்லூரிமுன்னாள் அதிபர், நம் வல்வை மைந்தன் திரு. ந .அரியரத்தினம்அவர்கள் எழுதிய வல்வை முத்துமாரி அம்மன் புகழ் கூறும் சிறந்தநூல் – அம்பாள் அருளாட்சி – நூல் வெளியீடானது டென்மார்க்கில் வல்வை ஒன்றியத்தின் ஆதரவுடன் கிரீன்ஸ்ரட் நகர தமிழர்கலாச்சாரக் கலையகத்தில் கடந்த மாதம் நடைபெற்றது.
மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், வரவேற்புரையை தொடர்ந்துஆசிரியர் கே .எஸ் துரை அவர்கள் நூல் சம்பந்தமானகருத்துக்களை கூறினார்.
தொடர்ந்து நூலாசிரியர் திரு ந. அரியரத்தினம் அவர்கள் நூல் பற்றி விளக்கம் அளித்தார். நூல்வெளியீட்டை தொடர்ந்து கலந்துரையாடலுடன் விழா நிறைவுபெற்றது.